காஞ்சியில் உலக அமைதிக்காக ஸ்ரீ சுதர்ஷன ஹோமம்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் ஸ்ரீ காமகோடி பீடத்தின் சார்பில் உலக அமைதி வேண்டி ஸ்ரீ சுதர்ஷன ஹோமம் நடந்து வருகிறது.
காஞ்சி சங்கர மடத்தில் நேற்று இந்த ஹோமம் தொடங்கியது. ஸ்ரீ சுதர்ஷன ஹோமத்துடன் ஸ்ரீ மகாலட்சுமிஹோமமும் நடத்தப்பட்டு வருகிறது.
வரும் திங்கள்கிழமை வரை 5 நாட்களுக்கு இந்த புண்ணிய நிகழ்ச்சி நடைபெறும்.
இதில் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியையொட்டி தினமும் காலை 11.30 மணிக்கு தீபாராதனையும், மாலை 4 மணிக்கு மகா சுதர்ஷனஜெபமும், இரவு 7.30 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனை, சுதர்ஷன சகஸ்ரநாம அர்ச்சனை, லட்சுமி சகஸ்ரநாமஅர்ச்சனை ஆகியவையும் நடக்கும்.












Click it and Unblock the Notifications