நன்றி ஊர்வலத்தை தொடங்கினார் ஸ்டாலின்
சென்னை:
போலீஸாரின் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் மு.க.ஸ்டாலின் தனது ஊரவலத்தை நேற்றிரவு தொடங்கினார்.
தனக்கு வாக்களித்து மேயராக்கிய மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக இந்த ஊர்வலத்தை அவர் நடத்தினார்.
மேயர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவுடன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக சென்னையின் முக்கிய பகுதிகளில்ஊர்வலமாக செல்லப் போவதாக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். பின்னர் சிலகட்டுப்பாடுகளுடன் அனுமதி கொடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பெரம்பூர் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை ஊர்வலமாகச் சென்றார்ஸ்டாலின். குட்டிச் சந்துகள் வழியாகவும் அவரது ஜீப் சென்றது.
ஏராளமான மக்கள் திரண்டு நின்று ஸ்டாலினுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர்.
இந்த ஊர்வலத்தின்போது மைக் மற்றும் ஒலிபெருக்கி உபயோகிக்க கூடாது என்று கூறப்பட்டிருந்தது. இருப்பினும் மைக் மூலமேபேசினார் ஸ்டாலின்.
தொடர்ந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும் அவர் செல்கிறார்.












Click it and Unblock the Notifications