For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்துக்கு உரிய நீரை தந்துவிட்டோம்: ஜெயலலிதாவுக்கு கிருஷ்ணா கடிதம்

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

2001-2002ம் ஆண்டில் தமிழகத்துக்கு தர வேண்டிய பங்கு நீரை கர்நாடகம் வழங்கிவிட்டதாக அம் மாநிலமுதல்வர் கிருஷ்ணா கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தின் விவரம்:

இந்த ஆண்டு மே மாத இறுதியில் கர்நாடகத்தின் அணைக்கட்டில் 9.17 டி.எம்.சி. தண்ணீர் தான்சேமிக்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழகத்தின் மேட்டூர் அணையில் 11.36 டி.எம்.சி. நீர் சேமிக்கப்பட்டிருந்தது.

இதன்மூலம் தமிழகத்தின் நீர் அளவு கர்நாடகத்தைவிட அதிக அளவில் இருந்தது உறுதியாகிறது. மேட்டூரில்ஏற்கனவே இருந்த 63 டி.எம்.சி. நீரோடு சேர்த்து ஜூன் 1ம் தேதி 277 டி.எம்.சி. நீர் இருந்தது. (இது கர்நாடகம்வழங்கிய நீர் அல்ல, தமிழகத்துக்குக் கிடைத்த மழை நீர் என்பது குறிப்பிடத்தக்கது).

இந்த ஆண்டு நீர் விடுவதற்கான காலக்கெடு ஜூன் 1ம் தேதி தான் தொடங்கியது.

கடந்த ஆண்டு கர்நாடகத்தில் பெரும் வறட்சி நிலவியபோதும் கூட தமிழகத்திற்கு போதிய நீர் வழங்கப்பட்டதுஎன்று கூறியுள்ளார்.

மேலும் எவ்வளவு நீரி தமிழகத்துக்குத் தரப்பட்டது என்பதை அளவிட நாங்கள் பிலிகுண்டு அணைக் கட்டைத்தான் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறோம். மேட்டூரை கணக்கில் எடுக்கவில்லை என்றும் கிருஷ்ணாகூறியுள்ளார்.

தஞ்சாவூரில் ஜெயலலிதா: வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றிய விவசாயிகள்

காவிரி ஆணையத்தை புறக்கணிப்பது சரியே: நெடுமாறன், வீரமணி

கர்நாடம் பொய் சொல்கிறது: ஜெயலலிதா

ஜெ. செய்வது சரியல்ல- கருணாநிதி

நீர் தேடும் காவிரி

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X