For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கராத்தே, தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை மேயராக கராத்தே தியாகராஜன் பொறுப்பேற்றதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவருக்கும்தமிழக அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மேயர் பதவியை காலியாக வைக்கச் சொல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் அந்தப் பொறுப்பில்கராத்தே தியாகராஜனை நியமித்திருப்பதை எதிர்த்து வழக்கறிஞர் விஜயன் உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி முருகேசன் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இன்றுவிசாரித்தது.

இந்த வழக்குத் தொடர்பாக 1 வார காலத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு கராத்தே தியாகராஜனுக்கும்,தமிழக அரசின் சட்டத் துறைக்கும், மாநகராட்சி ஆணையருக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஸ்டாலினிடம் இருந்து மேயர் பதவி பறிக்கப்பட்ட பின்னர் அந்தப் பதவிக்கு தேர்தல் நடத்த நீதிமன்றம் தடைவிதித்திருந்தது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவுப்படி அந்தப் பதவியை காலியாக வைத்திருக்க வேண்டும்.

ஆனால், துணை மேயராக இருந்த கராத்தேவை இந்தப் பதவியில் அமர்த்தி தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்புசெய்துவிட்டதாக தனது வழக்கில் விஜயன் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X