For Daily Alerts
Just In
அரசுக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். சீட்கள் எண்ணிக்கை 750 ஆக அதிகரிப்பு
சென்னை:
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கை 750 ஆகஉயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை 435 எம்.பி.பி.எஸ். சீட்கள் தான் இருந்தன.
சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் எண்ணிக்கை 100லிருந்து 150 ஆகவும்,செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் 50லிருந்து 150 ஆகவும், கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரியில் 110லிருந்து150 ஆகவும், சேலம் கல்லூரியில் 75லிருந்து 150 ஆகவும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் மாணவர்எண்ணிக்கை 100லிருந்து 150 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த மருத்துவக் கல்லூரிகளை விரிவாக்கவும், வகுப்பறைகள், லேப், ஆபரேசன் தியேட்டர்கள் உள்ளிட்டஅடிப்படை வசதிகளை அதிகரிக்கவும், கூடுதல் பேராசிரியர்கள், ஊழியர்களை நியமிக்கவும் ரூ. 42 கோடியையும்அரசு ஒதுக்கியுள்ளது.
Comments
Story first published: Wednesday, June 26, 2002, 5:30 [IST]