வைகோ கைது பொடா சட்டத்துக்கே எதிரானது: பா.ஜ.க.

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டுள்ளது பொடா சட்டம் கொண்டு வரப்பட்டதன்நோக்கத்திற்கே எதிரானது என்று அகில இந்திய பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.

டெல்லியில் "தினமணி" பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டியின் போது கூறியதாவது:

பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோவை பா.ஜ.க. கைவிட்டுவிட்டதாகக் கூறப்படுவது தவறு.

விடுதலைப்புலிகளையும் தமிழ் ஈழத்தையும் ஆதரிப்பதை நாங்கள் ஏற்கவில்லை. ஆனால் ஒரு இயக்கத்தைப்பற்றிப் பேசியதற்காக பொடா சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியாது. அது அந்தச் சட்டத்தை கொண்டு வந்ததன்நோக்கத்திற்கே எதிரானதாகும். நியாயமற்றதும் கூட.

வைகோவை கைது செய்த தமிழக அரசை பா.ஜ.கவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் கண்டித்துள்ளன. ஆனாலும்அவருடைய கைது மத்திய அரசுக்கு எந்தவிதமான தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தவில்லை.

வைகோ கைது செய்யப்பட்டது மாநில சட்ட-ஒழுங்குப் பிரச்சனை என்பதால் அதில் மத்திய அரசு தலையிடவில்லை.இதை மதிமுகவே சட்ட ரீதியாகச் சந்திக்கும். அதற்கான உதவிகளை பா.ஜ.க. செய்யத் தயாராக உள்ளது.

முன்னாள் சட்டத்துறை அமைச்சரான அருண் ஜேட்லி இது தொடர்பாக மதிமுக தலைவர்களுடன் ஆலோசனைநடத்தியுள்ளார்.

மேலும் வைகோ கைது செய்யப்பட்டதால் மதிமுக அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று சிலர் வற்புறுத்திவருகின்றனர். அவர்கள் ஏன் பதவி விலக வேண்டும்? அவர்கள் என்ன தவறு செய்தார்கள் என்றார் வெங்கையாநாயுடு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+