சேலம் to
திருச்சி:
சேலத்திலிருந்து திருச்சி வந்த பஸ்சில் வெடிகுண்டு பொருட்கள் வைக்கும் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து திருச்சி பஸ் நிலையத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
சேலத்திலிருந்து ஒரு பஸ் வெள்ளிக்கிழமை திருச்சி வந்தது. பஸ் நிலையம் வந்து சேர்ந்த அந்த பஸ்சில் பயணிகள் அனைவரும் இறங்கிச் சென்ற பின்னர் ஒரு பெட்டி இருந்ததை கண்டக்டர் பார்த்தார்.
இதையடுத்து சந்தேகம் அடைந்த கண்டக்டர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தார்.
போலீசார் விரைந்து வந்து அந்த பெட்டியைப் பறிதல் செய்து சோதனையிட்டனர். அது வெடிகுண்டுகளை வைக்கும் பெட்டி என்பது அப்போது தெரிய வந்தது.
இதையடுத்து படு எச்சரிக்கையுடன் அந்தப் பெட்டியைப் போலீசார் திறந்து பார்த்தனர். ஆனால் அந்தப் பெட்டிக்குள் குண்டு எதுவும் இல்லை.
வெடிகுண்டு வைக்கும் பெட்டியை யார் பஸ்சிலேயே விட்டுச் சென்றது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications