For Daily Alerts
Just In
கருணாநிதி மனைவிக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி
சென்னை:
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் நெஞ்சு வலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தயாளு அம்மாளுக்கு நேற்று (வியாழக்கிழமை) காலை திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக அவர் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது நிலைமை குறித்து டாக்டர்கள் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
Story first published: Friday, May 24, 2002, 5:30 [IST]