For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிணறு தோண்டிய புது மாப்பிள்ளை மண்ணில் புதைந்து பரிதாப சாவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கிணறு தோண்டிக் கொண்டிருந்தபோது மண் சரிந்து விழுந்ததில் புது மாப்பிள்ளை உள்ளிட்ட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஈரால் என்ற பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன், வண்ணமுத்து, முத்துக்கிருஷ்ணன் மற்றும் முத்துப் பாண்டியன் ஆகியோர் கிணறு தோண்டிக் கொண்டிருந்தனர்.

இவர்களில் முத்துப் பாண்டியனுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது.

ஈரால் கிராமத்தில் அவர்கள் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். முத்துக்கிருஷ்ணன் வெளியில் நின்று மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.

மற்ற இரண்டு பேரும் மண் தோண்டிக் கொண்டிருந்தபோது திடீரென்று மண் சரிந்ததில் மூன்று பேருமே மண்ணுக்குள் புதைந்தனர்.

இதில் வண்ணமுத்து பத்திரமாக மீட்கப்பட்டார். மற்ற இரண்டு பேரும் பரிதாபமாக இறந்தனர்.

புது மாப்பிள்ளையான முத்துப் பாண்டியன் மண்ணில் புதைந்து இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X