For Daily Alerts
Just In
ராமேஸ்வரத்தில் 8 மீனவர்கள் மாயம்
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 8 மீனவர்களைக் காணவில்லை என்று புகார் கூறப்பட்டுள்ளது.
முனீஸ்வரன், அந்தோணி சிலுவை, சாமுவேல், கார்மேகம், திரவியம், ராமச்சந்திரன், கார்த்திக் ஆகியோர் உள்ளிட்ட சில மீனவர்கள் கடந்த 29ம் தேதி கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர்.
ஆனால் இவர்கள் உள்ளிட்ட எட்டு பேர் மட்டும் இதுவரை கரைக்குத் திரும்பி வரவில்லை.
இதனால் கவலையடைந்த அவர்களது குடும்பத்தினர் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். மீன் வளத் துறையிலும் புகார் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
Comments
Story first published: Friday, May 24, 2002, 5:30 [IST]