For Daily Alerts
Just In
நாளை கடலூரில் கண்டன ஊர்வலம்
கடலூர்:
தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நாளை கடலூரில் ஊர்வலம் நடத்த அவ்வியக்கத்தின் மாணவர் பிரிவு முடிவு செய்துள்ளது.
இன்று கடலூரில் நடந்த அவசரக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மாணவர் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கடலூர் மத்திய சிறையில் தான் நெடுமாறன் அடைக்கப்பட்டுள்ள நிலையில் நாளை இந்தப் பேரணி நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து கடலூர் சிறைக்கு முன்பாக சுமார் 200 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நெடுமாறனைக் கைது செய்த தமிழக கியூ பிராஞ்ச் போலீசாரும் கடலூரிலேயே முகாமிட்டு நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
Story first published: Friday, May 24, 2002, 5:30 [IST]