ஜனாதிபதி, பிரதமருக்கு தமிழர் தேசிய இயக்கம் அவசர தந்தி
சென்னை:
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கைது செய்யப்பட்ட விஷயத்தில் தலையிடக் கோரி ஜனாதிபர் டாக்டர் அப்துல் கலாம், பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.என். கிர்பால் ஆகியோருக்கு அந்த இயக்கம் இன்று தந்திகளை அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளரான சுப. வீரபாண்டியன் இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில்,
பொடா சட்டத்தின் கீழ் நெடுமாறனைக் கைது செய்த தமிழக அரசை தமிழர் தேசிய இயக்கம் கடுமையாகக் கண்டிக்கிறது.
இது தொடர்பாக எங்கள் இயக்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து வரும் 4ம் தேதி நடக்கும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
இதற்கிடையே இவ்விஷயத்தில் தலையிட வேண்டும் என்று கோரி டாக்டர் கலாம், வாஜ்பாய், அத்வானி, நீதிபதி கிர்பால் மற்றும் பலருக்கு நாங்கள் தந்திகளை அனுப்பியுள்ளோம் என்றார் சுப. வீரபாண்டியன்.












Click it and Unblock the Notifications