For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சொல்லிட்டு பள்ளம் தோண்டுங்கப்பா .. குமரியார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சாலைகள் மற்றும் தெருக்களில பள்ளம் தோண்டினால் முன்பே கூறி விட்டு தோண்ட வேண்டும் என்று மாநகராட்சிமற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசியலில் பள்ளம் தோண்டுவதில் எல்லா அரசியல்வாதிகளும் பிசியாக இருக்கும் நேரத்தில் மக்களின் அன்றாடபிரச்சனையில் அக்கறை காட்டியுள்ள குமரியாருக்கு ஒரு நன்றி.

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் பள்ளங்களும், அதை நிரப்ப மண்ணைப் போட்டு ஏற்படுத்தப்பட்ட மேடுகளுமாககாணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அதிகம் அவஸ்தைக்குள்ளாகி வருகிறார்கள். பெரிய சாலைகளும்இந்த பள்ளங்களுக்கு தப்பவில்லை.

மாநகராட்சி சார்பிலும், தனியார் தொலைபேசி துறையினர் சார்பிலும், அரசுத் துறையான பி.எஸ்.என். சார்பிலும்மாறி மாறி குழி தோண்டி வருகிறார்கள். இதனால் பொதுமக்கள் படும் அவதி சொல்லி மாளாது.

இப்படி திடீர் திடீரென்று பள்ளம் தோண்டுவதை தடுக்குமாறு மாநகராட்சி, அரசுத் துறை நிறுவனங்களுக்கு குமரிஅனந்தன் அறிக்கை மூலம் கோரிக்கை வைத்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

சென்னை நகரில் தொலைபேசி துறையினர், மாநகராட்சியினர், அரசுத் துறையினர் திடீர் திடீரென்று பள்ளங்கள்தோண்டி வருகின்றனர். இதனால் போக்குவரத்து அதிகம் பாதிக்கப்படுகிறது. மக்களும் அவதியுறுகிறார்கள்.

இது மாதிரியான சூழ்நிலைகளில் எந்தப் பகுதியில் எப்போது பள்ளம் தோண்டப்படுகிறது என்பதை முன்கூட்டியேபொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X