நடிகர்கள் வீட்டில் அதிரடி ரெய்ட் நடத்திய அதிகாரி திடீர் மாற்றம்
சென்னை:
நடிகர்கள் அஜீத், பிரசாந்த், ஜெயராம், நடிகை மீனா ஆகியோரின் வீட்டில் ரெய்ட் நடத்த உத்தரவிட்ட வருமான வரித்துறை அதிகாரிதிடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நடிகர்கள் கொடுத்த நெருக்குதல் காரணமாக அவர் தூக்கியடிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
செல்வராஜ் என்ற அதிகாரியின் உத்தரவின்பேரில் தான் இந்த அதிரடி ரெய்ட்கள் நடந்தன. இதில் கோடிக்கணக்கான கருப்புப் பணம்சிக்கியது. மேலும் பெரிய நடிகர்கள் என்றும் பாராமல் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு வரச் சொல்லி உத்தரவிட்டு அங்கு வைத்தும்விசாரணை நடத்தினார் செல்வராஜ்.
பாபா படத்தின் கணக்கு வழக்குகளையும் இவர் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி கவனித்து வந்ததாகத் தெரிகிறது. படத்தில் முதலீடு,வியாபாரம் ஆகியவை குறித்து அவ்வப்போது ரஜினி உள்பட பாபா படத் தயாரிப்புக் குழுவினரிடம் விளக்கம் கேட்டு வந்தார்.
இந் நிலையில் செல்வராஜ் நேற்று திடீரென மாற்றப்பட்டார். மத்திய தகவல் பிரிவு கமிஷ்னர் என்ற டப்பா பதவிக்கு தூக்கிஅடிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications