For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமைச்சர் கண்ணப்பன் கைதாவாரா?

By Staff
Google Oneindia Tamil News

ஊட்டி:

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நான் பேசியதில் தவறு ஏதும் இல்லை. இதனால், என்னை பதவி நீக்கம் செய்ய முடியாது என மத்தியஅமைச்சர் கண்ணப்பன் கூறியுள்ளார்.

புலிகளுக்கு ஆதரவாகப் பேசி வரும் கண்ணப்பனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா நேற்று பிரதமர்வாஜ்பாய்க்கு கடிதம் எழுதினார்.

இது குறித்து கண்ணப்பன் கூறுகையில், பதவிக்காக நான் எப்போதும் அலைந்ததில்லை. இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற உள்ளபல்வேறு இயக்கங்களில் புலிகள் இயக்கமும் ஒன்று. இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நான் பேசுவதில் எந்தத் தவறும் இல்லை.அவர்களுக்கு எங்கள் ஆதரவு தொடரும்.

இதனால் எல்லாம் எனது பதவியை பறித்துவிட முடியாது.

ஆனால், மத்திய அமைச்சர் என்றும் பாராமல் ஜெயலலிதா அரசு என்னைக் கைது செய்ய வாய்ப்புளளது. எப்போது வேண்டுமானாலும்நான் கைதாகலாம் என்றார் கண்ணப்பன்.

டி.ஜி.பி. பேட்டி:

இதற்கிடையே புலிகளுக்கு ஆதரவாக யார் பேசினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில காவல்துறை டி.ஜி.பி.நெயில்வால் கூறியுள்ளார். மத்திய அமைச்சர் கண்ணப்பன் மீது பொடா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சட்ட ஆலோசனை நடந்துவருவதாகக் கூறினார்.

அவரைக் கைது செய்ய மத்திய அரசிடம் அனுமதி கோரப்படுமா என்று என்னால் விளக்கம் தர முடியாது.

வைகோவின் வீட்டில் சோதனை நடத்தவும் நீதிமன்றத்தில் அனுமதி கோரப்படும் என்றார் நெயில்வால்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X