போர்க்கால அடிப்படையில் வறட்சி நிவாரணப் பணிகள்: கலெக்டர்களுக்கு உத்தரவு
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி:
தமிழகத்தில் வறட்சி நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்யுமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக மாநில வருவாய்த்துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் கூறினார்.
கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுமே வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே வறட்சி நிவாரணப் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து தீவிரமாக செயல்படும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
வறட்சி நிவாரணப் பணிகளை செயல்படுத்த துரிதமாக நிதி ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார் தளவாய் சுந்தரம்.












Click it and Unblock the Notifications