"என் கணவரைக் கொன்று விட்டு போலீசார் நாடகம்": கவுஸ் பாட்சா மனைவி கதறல்
சென்னை:
என்னுடைய கணவரைப் போலீசாரே சுட்டுக் கொன்று விட்டு, அவர் தப்பியோடி விட்டதாகப் போலீசார் நாடகமாடிவருகின்றனர் என்று கொள்ளை வழக்குகளில் கைதான கவுஸ் பாட்சாவின் மனைவி கீதா புகார் கூறியுள்ளார்.
போலீசாரிடம் இருந்து தப்பிச் சென்று சென்னையில் தொடர் கொள்ளைகளில் ஈடுபட்டு வரும் கவுஸ் பாட்சாஉடனடியாகச் சரணடைய வேண்டும் என்று சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர் விஜய்குமார் நேற்றுஎச்சரிக்கை விடுத்திருந்தார்.
அவன் உடனடியாக சரணடையாவிட்டால் கண்டவுடன் சுட்டுக் கொல்ல வேண்டிய நிலை உருவாகும் என்றும்அவர் எச்சரித்தார்.
இந்நிலையில் தன் கணவரைப் போலீசார் சுட்டுக் கொன்று விட்டு அதை மறைப்பதற்காக இவ்வாறு எச்சரிக்கைவிடுக்கும் நாடகத்தைப் போலீசார் நடத்திக் கொண்டிருக்கின்றனர் என்று கீதா கூறியுள்ளார். இது குறித்துநிருபர்களிடம் கீதா கூறுகையில்,
என்னுடைய கணவர் தப்பிச் சென்று விட்டார் என்று போலீசார் கூறுவதை என்னால் நம்பவே முடியவில்லை.அவரை நான் தான் போலீசாரிடமே ஒப்படைத்தேன்.
அவர் உண்மையிலேயே தப்பிச் சென்றிருந்தால் எப்படியாவது என்னை வந்து பார்த்திருப்பார். குறைந்ததுபோனிலாவது தொடர்பு கொண்டு என்னுடன் பேசியிருப்பார். ஆனால் இதுவரை அவர் என்னை வந்து பார்க்கவோஅல்லது போனில் பேசவோ இல்லை.
இதனால் என் கணவர் உண்மையிலேயே போலீசாரிடமிருந்து தப்பிச் சென்று விட்டாரா என்று எனக்குச் சந்தேகம்ஏற்பட்டுள்ளது.
அவரைச் சுட்டுக் கொன்று விட்டு அதிலிருந்து தப்பிப்பதற்காகத் தான் போலீசார் இப்படிப் பொய் சொல்லிநாடகமாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்ப்பஸ் (ஆள் கொணர்வு) மனு ஒன்றை நான் தாக்கல்செய்துள்ளேன்.
என் கணவர் தப்பிச் சென்று விட்டதாகப் போலீசார் கூறிய நாளிலிருந்து அவர்கள் என்னையும் என்னுடையபக்கத்து வீட்டுக்காரர்களையும் தொடர்ந்து வந்து விசாரணை என்கிற பெயரில் பயமுறுத்திக் கொண்டிருக்கின்றனர்என்று கீதா கூறினார்.
கவுஸ் பாட்சா - கீதா தம்பதிக்கு இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர். பாட்சாவின் இரண்டாவதுமனைவியான கீதா வேலூரில் தன் குழந்தைகளுடன் தங்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications