திருச்சி, நெல்லை, சேலத்திற்கு புதிய போலீஸ் கமிஷனர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருச்சி, திருநெல்வேலி மற்றும்சேலம் ஆகிய மாநகர்களுக்குப் புதிய போலீஸ் கமிஷனர்கள்நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏ. அலெக்சாண்டர் மோகன், கே. நந்தபாலன் மற்றும் சுனில்குமார் ஆகிய மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகளும்காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த மூன்று அதிகாரிகளுக்கும் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதன்படி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக அலெக்சாண்டர் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்சென்னையில் பயிற்சி டி.ஐ.ஜியாக இருந்தார்.
தமிழக மின்வாரிய கண்காணிப்பு (சென்னை) பிரிவின் டி.ஐ.ஜியாக இருந்த நந்தபாலன் திருச்சி மாநகர போலீஸ்கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே போல் மாநிலப் பணிக்குத் திரும்பி வரும் டி.ஐ.ஜி. சுனில்குமார் சேலம் மாநகர போலீஸ் கமிஷனராகியுள்ளார்.












Click it and Unblock the Notifications