2 சாலை விபத்துக்களில் 7 பேர் சாவு
ராமநாதபுரம்:
தமிழகத்தில் இன்று நேரிட்ட 2 வெவ்வேறு சாலை விபத்துக்களில் 4 அரசு ஊழியர்கள் உள்பட 7 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர்.
பெரம்பலூர் அருகே...
கந்தர்வகோட்டை பஞ்சாயத்து யூனியன் கமிஷனர் சின்னப்பா உள்பட 10 அரசு அதிகாரிகள் ஒரு டாடா சுமோகாரில் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை பெரம்பலூர் அருகே சென்று கொண்டிருக்கும் போது எதிரே நின்று கொண்டிருந்த ஒரு லாரி மீதுசுமோ கார் பயங்கரமாக மோதியது.
இவ்விபத்தில் சின்னப்பா உள்பட நான்கு அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
காயமடைந்த மற்ற ஆறு பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் அருகே...
இதற்கிடையே ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரையிலிருந்து ஏராளமான பக்தர்களை ஏற்றிக் கொண்டு இன்று
காலை ஒரு பஸ் ராமேஸ்வரத்திற்குக் கிளம்பியது. எதிர்த் திசையில் ராமேஸ்வரத்திலிருந்து மற்றொரு அரசு பஸ்வந்து கொண்டிருந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம்காத்தான் அருகே இந்த இரண்டு பஸ்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இவ்விபத்தில் ஒரு தம்பதி உள்பட மூன்று பேர் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
விபத்தில் காயமடைந்த 15 பேர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். படுகாயமடைந்த ஒருபஸ்சின் டிரைவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.












Click it and Unblock the Notifications