For Daily Alerts
Just In
கும்பகோணத்தில் அதிமுக தொண்டர் வெட்டிக் கொலை: 2 பேர் கைது
கும்பகோணம்:
கும்பகோணத்தில் அதிமுக தொண்டர் பயங்கரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம்தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கும்பகோணத்தில் உள்ள 24வது வார்டின் அதிமுக செயலாளராக இருந்தவர் ராஜன். இவர் நேற்று அங்குள்ள ஒருடீக்கடையில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் திடீரென்று ராஜனைத் தாக்க ஆரம்பித்தது.
கத்தி, அரிவாள், ஈட்டி உள்ளிட்ட பல பயங்கரமான ஆயுதங்களைக் கொண்டு அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள்ராஜனை கண்மூடித்தனமாகத் தாக்கினர்.
இதில் பலத்த வெட்டுக் காயங்களுடன் கீழே சரிந்த ராஜன் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்.
இது தொடர்பாக 2 பேரைக் கைது செய்த கும்பகோணம் போலீசார் மேலும் சிலரைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
Story first published: Friday, May 24, 2002, 5:30 [IST]