சென்னை அரசு மருத்துவமனைகளில் நுழைவுக்கட்டணம் மூலம் ரூ. 25 லட்சம் வசூல்!
சென்னை:
சென்னை நகரிலுள்ள அரசு மருத்துவமனைகளில் நுழைவுக் கட்டணமாக இதுவரை ரூ.25 லட்சம்வசூலிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளைப் பார்க்க வருபவர்கள் நுழைவுக் கட்டணம் செலுத்தும் முறையைதமிழக அரசு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தியது.
இந்தத் திட்டத்திற்கு முதலில் எதிர்ப்பு கிளம்பினாலும் பின்னர் இது சகஜமாகி விட்டது. நுழைவுக் கட்டணம் ரூ.5ஆகும்.
சென்னையைப் பொறுத்தவரையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைதான் அதிக அளவு நிதிவசூல் செய்துள்ளது. இங்கு ரூ.10 லட்சம் வரை வசூலாகியுள்ளது.
அரசு பொது தலைமை மருத்துவமனையில் ரூ.8 லட்சம் வரையிலும் வசூல் செய்யப்பட்டுள்ளது.
மற்றொரு அரசு மருத்துவமனையான ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.6 லட்சம் வரைவசூலாகியுள்ளது.
இந்தப் பணத்தை மருத்துவமனை நிர்வாகப் பணிகள், வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்திவருகிறார்கள்.