மேட்டூர் அணையில் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென்று உயர ஆரம்பித்துள்ளது.
தென்மேற்குப் பருவ மழை காரணமாக கர்நாடகத்தின் கபினி அணை நிறையத் தொடங்கியுள்ளது.
இதைத் தொடர்ந்து அங்கு வந்து சேரும் ஏராளமான உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.
இவ்வாறு திறந்து விடப்பட்ட காவிரி நீர் கடந்த ஒரு வார காலமாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
இன்று காலை மேட்டூர் நீரின் அளவு 49.16 அடியாக இருந்தது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 3 அடிக்கு மேல்நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
அடுத்த ஒரு சில நாட்களில் நீர் மட்டம் மேலும் அதிகரிக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள்தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications