For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்திய அரசுக் கூட்டணியில் இருந்து மம்தா விலகினார்

By Staff
Google Oneindia Tamil News

கொல்கத்தா:

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் நேற்றிரவு விலகியது.

கொல்கத்தாவை தலைமையகமாகக் கொண்டுள்ள கிழக்கு ரயில்வே மண்டலத்தை இரண்டாகப் பிரிக்கும் மத்திய அரசின் திட்டத்துக்குமம்தா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்.

தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் பைரோன் சிங் செகாவத்துக்கு அவரது கட்சிவாக்களிக்கவில்லை. இந்தத் தேர்தல் நடந்த அன்று பிரதமரின் வீட்டின் முன் தர்ணா நடத்தினார் மம்தா.

மம்தாவுடன் பேச்சு நடத்த பிரதமர் அழைப்பு விடுத்தார். அதையும் மம்தா புறக்கணித்துவிட்டார்.

இந் நிலையில் நேற்று இரவு அவரது திரிணமூல் காங்கிரஸ் தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருந்து விலகியது. அவரது கட்சிக்கு 9எம்.பிக்கள் உள்ளனர்.

இரண்டாவது முறையாக மம்தா இந்தக் கூட்டணியில் இருந்து விலகியுள்ளார். முன்பு ராணுவ ஊழல் வெடித்தபோது பாதுகாப்பு அமைச்சர்பெர்னாண்டரை பதவி நீக்கக் கோரி விலகினார். ஆனால், மீண்டும் சேர்ந்தார்.

இப்போது கிழக்கு மண்டல ரயில்வேயை பிரிக்கும் திட்டத்தை பிரதமர் நிறுத்திவைத்தால் மீண்டும் கூட்டணியில் சேருவோம் என மம்தாஅறிவித்துள்ளாா மம்தா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X