For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் வெளிநாட்டினருக்கு புதிய கட்டுப்பாடுகள்

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:

அமெரிக்காவுக்குச் செல்லும் வெளிநாட்டினர் இனி மேல் கடும் பரிசோதனைகளுக்கு உள்ளாக்கப்பட உள்ளனர். அவர்களதுகைரேகைகளும் பதிவு செய்யப்பட உள்ளன.

அமெரிக்க குடியுரிமைதத்துறையின இந்த புதிய சட்ட விதிகள் அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. அமெரிக்காவின்அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்களிலும் இந்த கடினமான குடியுரிமை விதிகள் அமல்படுத்தப்படவுள்ளன.

நாட்டுக்குள் வருபவர்களில் சந்தேகத்துக்கிடமானவர்களின் கைரேகைகளைப் பதிவு செய்து கொள்ளவும், அவர்களது ரேகைகளைகுற்றவாளிகளின் ரேகைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும் புதிய விதியில் இடமுள்ளது.

மேலும் அமெரிக்காவில் எங்கு தங்கப் போகிறார்கள் என்ற முழு விவரத்தையும் அதிகாரிகளிடம் தெரிவித்தாக வேண்டும். தங்க ஆரம்பித்தபிறகு இருப்பிடம் மாறினாலும் அது குறித்தும் தெரிவிக்க வேண்டும். நாட்டை விட்டு வெளியேறினால் குடியுரிமை அலுவலகத்துக்குத்தெரியப்படுத்த வேண்டும்.

ஈரான், ஈராக், சவுதி அரேபியா, சூடான், சிரியா நாட்டினருக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் எச்.1 பி விசா கொடுப்பது குறைக்கப்பட்டுவிட்டது. முந்தைய ஆண்டுகளைவிட கடந்த ஆண்டு 54 சதவீதம் குறைவானவிசாக்களே தரப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X