சென்னையில் டாக்டர் வீட்டில் ரூ.1 லட்சம் நகை-பணம் கொள்ளை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் எம்.பி.பி.எஸ். வீட்டிலிருந்து கொள்ளையர்கள் ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகைகள், வெள்ளிப்பாத்திரங்கள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

சென்னை கே.கே. நகரில் வெங்கட்ராமன் என்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் வசித்து வருகிறார். அவருடைய மகன்சுப்பிரமணியம் பாண்டிச்சேரியில் டாக்டராக உள்ளார். சுப்பிரமணியத்தின் மனைவி மகாலட்சுமியும் டாக்டர் தான்.

டாக்டர் சுப்பிரமணியம் விடுமுறைக்காக சென்னை வந்திருந்தார். நேற்று இரவு அவர்கள் வீட்டில் அனைவரும்தூங்கிக் கொண்டிருந்த போது அங்கு கொள்ளையர்கள் வந்துள்ளனர்.

ஜன்னல் ஓரமாகவே அந்த வீட்டில் பீரோ வைக்கப்பட்டிருப்பதைக் கண்ட கொள்ளையர்கள், அதை நீண்டகொக்கியால் ஜன்னல் பக்கமாகவே திருப்பியுள்ளனர்.

பின்னர் பீரோவை உடைத்து அதிலிருந்து 30 பவுன் நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள் மற்றும் ரூ.15,000 பணம்ஆகியவற்றைக் கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.

வீட்டிலுள்ளவர்கள் காலையில் எழுந்து பார்த்த போது தான் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.

இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து தடய நிபுணர்களின் உதவியுடன் சோதனை நடத்திய போலீசார்கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+