"பாபா" படப் பெட்டி கடத்தல்: மேலும் 10 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டத்தில் தியேட்டரில் இருந்து "பாபா" படப் பெட்டி கடத்தப்பட்டது தொடர்பாக மேலும் 10 பேரைபோலீசார் கைது செய்தனர்.

கடந்த வியாழக்கிழமை ஜெயங்கொண்டத்தில் "பாபா" படம் வெளியாகவிருந்த தியேட்டரில் தாக்குதல் நடத்திய25 பேர் கொண்ட கும்பல் அப்படத்தின் பிலிம் சுருள்கள் இருந்த பெட்டியை அதிரடியாகக் கடத்திச் சென்றது.

கடந்த மூன்று நாட்களாகத் தேடிய தனிப்படை போலீசார் "பாபா" படப் பெட்டியைத் திருடிய 2 பேரை முதலில்கைது செய்தனர். படப் பெட்டியும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக மேலும் 10 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இதற்கிடையே ஜெயங்கொண்டம் தியேட்டரில் பலத்த பாதுகாப்புடன் "பாபா" படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

கடத்தப்பட்ட தியேட்டர் அதிபர் விடுவிப்பு:

இதற்கிடையே கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கடத்தப்பட்ட "சந்தோஷ்குமார்" தியேட்டரின் உரிமையாளர்ராஜகோபால் கடத்தல்காரர்களால் விடுவிக்கப்பட்டார்.

போலீசார் வெகு தீவிரமாகத் தேடியதையடுத்தும் ரஜினி ரசிகர்களும் தொடர்ந்து நெருக்கடி தந்ததாலும்ராஜகோபாலை கடத்தல்காரர்களே விடுவித்து விட்டனர்.

நேற்று இரவு அவர் பத்திரமாக வீட்டிற்கு வந்து சேர்ந்து விட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+