"பாபா" பாடலை பாடுவதா?- நெய்வேலி பாட்டுக் கச்சேரியில் அடிதடி
நெய்வேலி:
நெய்வேலியில் "பாபா" படப் பாடலைப் பாடுவதா வேண்டாமா என்பது தொடர்பாக இரு தரப்பினருக்கிடையேகடும் மோதல் ஏற்பட்டது.
ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நெய்வேலி தெர்மல் பஸ் நிலையம் அருகே பாட்டுக்கச்சேரிக்கு என்.எல்.சி. பஸ் ஊழியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
கடலூரைச் சேர்ந்த ஒரு ஆர்கெஸ்ட்ரா குழுவினர் இந்தக் கச்சேரியில் திரைப்படப் பாடல்களைப் பாடினார்கள்.
அப்போது பஸ் ஊழியர்களில் ஒருவரான பழனி என்பவர் "பாபா" படத்தில் வரும் ஒரு பாடலைப் பாட வேண்டும்என்று கோரி அதற்காக ரூ.501 பணத்தையும் ஆர்கெஸ்ட்ரா குழுவினரிடம் கொடுத்தார்.
உடனே அருகிலிருந்த பாமகவின் நகரச் செயலாளர் என். சக்ரவர்த்தி உள்ளிட்ட சிலர் "பாபா" பாடலைப் பாடக்கூடாது என்று கூறி ரூ.1,000 பணத்தை ஆர்கெஸ்ட்ரா குழுவினரிடம் கொடுத்தனர்.
இதனால் விக்கித்துப் போன ஆர்கெஸ்ட்ரா குழுவினர் பேசாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தனர்.
இதற்கிடையே "பாபா" பாடல் வேண்டும் என்று கூறியவர்களுக்கும் வேண்டாம் என்று கூறியவர்களுக்கும்இடையே கடும் கைகலப்பு ஏற்பட்டது.
ஒருவரையொருவர் நன்றாகத் தாக்கிக் கொண்டனர். சிறிது நேரத்தில் ஒருவரையொருவர் கற்களாலும் எறிந்துதாக்கிக் கொண்டனர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காகப் போடப்பட்டிருந்த போலீசார் உடனே தலையிட்டு கூட்டத்தைக்கலைத்தனர்.
இதற்கிடையே ஆர்கெஸ்ட்ரா குழுவினர் பாட்டுக் கச்சேரியைப் பாதியிலேயே முடித்துக் கொண்டு கிளம்பிவிட்டனர்.