மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கர்நாடகத்தில் உள்ள கபினி அணை நிரம்பி வழிவதால் மேட்டூர் அணைக்கு காவிரியில் நீர் வரத்துஅதிகரித்துள்ளது.
கேரளத்தில் பருவ மழை வலுத்துள்ளது. இதனால் கர்நாடகத்தில் உள்ள கபினி அணைக்கு நீர் வரத்துஅதிகரித்துள்ளதால் அணை நிரம்பி வழிகிறது.
இதைத் தொடர்ந்து கபினி அணையிலிருந்து வெளியேறும் உபரி நீர் காவிரி ஆற்றின் மூலம் தமிழகத்தின் மேட்டூர்அணைக்கு வந்து சேருகிறது.
மேட்டூர் அணையில் இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி நீர்மட்டம் 58.3 அடியாக இருந்தது. அணைக்குவிநாடிக்கு 38,250 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
இதே நிலை நீடித்தால் இன்னும் 2 நாட்களில் அணையின் நீர் மட்டம் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்றுதெரிகிறது.












Click it and Unblock the Notifications