நாளை சச்சிதானந்தரின் இறுதி சடங்கு
சென்னை:
சென்னையில் நேற்று மரணமடைந்த தன்னுடைய ஆன்மீக குரு சச்சிதானந்த சுவாமிகளின் உடலை எடுத்துக்கொண்டு நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றார். நாளை (புதன்கிழமை) வெர்ஜினியாவில் உள்ள லோட்டஸ்இன்டர்நேஷனல் ஆசிரமத்தில் அவரது இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.
கோயம்புத்தூர் மாவட்டம் செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த சச்சிதானந்த சுவாமிகள் நேற்று காலை 5.45 மணிக்குமரணமடைந்தார்.
நான் எங்கு இறந்தாலும் என்னுடைய உடலை ஆசிரம சமாதியில் தான் அடக்கம் செய்ய வேண்டும் என்றுஏற்கனவே சுவாமிகள் தன் சீடர்களிடம் கூறியிருந்தார்.
அதன்படி அமெரிக்காவின் வெர்ஜினியாவில் உள்ள ஆசிரமத்துக்குக் கொண்டு சென்று சுவாமிகளின் இறுதிச்சடங்குகளை நடத்த ரஜினி முடிவு செய்தார்.
இதையடுத்து சுவாமிகளின் உடலுடன் நேற்று இரவு 7.55 மணிக்கு விமானம் மூலம் அமெரிக்காவுக்குச் சென்றார்ரஜினி.
சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய ரஜினி, இந்த இழப்பு நான் எதிர்பாராத ஒரு பெரிய இழப்பு.அதைப் பற்றிக் கூற என்னிடம் வார்த்தைகளே இல்லை என்றார்.
"சுவாமிகள் உங்களிடம் கடைசியாக என்ன கூறினார்?" என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, "உழைக்கணும்.உழைக்கணும். நல்லா உழைச்சுக்கிட்டே இருக்கணும். இதைத் தான் குருஜி சொன்னார்" என்று ரஜினி பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications