இன்று ராஜிவ் பிறந்த நாள்: அமைச்சர்கள் நல்லிணக்க உறுதிமொழி எடுத்தனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 58வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

ராஜிவின் பிறந்த நாள் நல்லிணக்க நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது.

தமிழக தலைமைச் செயலகத்தில் ராஜிவின் உருவப் படத்திற்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மலரஞ்சலிசெலுத்தினர்.

பின்னர் பொதுப்பணித்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் அனைத்து அமைச்சர்களும் அதிகாரிகளும்நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பன்னீர்செல்வம் உறுதிமொழியை வாசிக்க மற்றவர்கள் அதைத்திருப்பி வாசித்தனர்.

இதே போல் காங்கிரஸ் உறுப்பினர்களும் இன்று ராஜிவ் பிறந்த நாளைக் கொண்டாடினர்.

சென்னையில் உள்ள தமிழக காங்கிரஸ் அலுவலகத்தில் ராஜிவின் படத்திற்கு குமரி அனந்தன், வாழப்பாடிராமமூர்த்தி உள்ளிட்ட பல தலைவர்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதே போல் தமிழகத்தில் உள்ள அனைத்து காங்கிரஸ் அலுவலகங்களிலும் ராஜிவ் பிறந்த நாள் விழாகொண்டாடப்பட்டது.

டெல்லியில்...

இதற்கிடையே டெல்லியில் ராஜிவின் நினைவிடத்தில் அவருடைய மனைவியும் காங்கிரஸ் தலைவருமானசோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி செய்தார்.

ராஜிவ் நினைவிடத்தில் பக்திப் பாடல்கள் பாடப்பட்டன. நல்லிணக்க உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளப்பட்டது.

மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராஜிவுக்கு அஞ்சலிசெலுத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+