வைகோ கைதை கண்டித்து திருச்சி to
திருச்சி:
பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திருச்சியிலிருந்து வேலூர் வரை பாதயாத்திரைமேற்கொள்ள மதிமுக முடிவு செய்துள்ளது.
திருச்சியில் மதிமுக அவைத்தலைவர் எல்.கணேசன் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கட்சியின் மாணவர் அணி, இளைஞர் அணி, தொண்டர் அணி ஆகிய மூன்று அணிகளும் இணைந்து இந்தபாதயாத்திரையை மேற்கொள்ளவுள்ளன.
ஆகஸ்ட் 30ம் தேதி திருச்சி மலைக்கோட்டை அடிவாரத்திலிருந்து பாதயாத்திரை கிளம்பும்.
சுமார் 400 கி.மீ. பயணம் செய்து 17 நாட்களுக்குப் பிறகு வேலூர் கோட்டையில் பாதயாத்திரை முடிவு பெறும்.பாதயாத்திரையில் கலந்து கொள்வோர் தங்களது அணிகளுக்குரிய சீருடையில் வருவார்கள்.
திருச்சி நகரம், புறநகரங்கள், தஞ்சாவூர், நாகப்பட்டனம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை வழியாக சென்றுகடைசியாக வேலூரை பாதயாத்திரை சென்றடையும்.
வைகோ கைதைக் கண்டித்து இந்தப் பாதயாத்திரை நடத்தப்படுகிறது என்றார் கணேசன்.












Click it and Unblock the Notifications