எய்ட்ஸ் நோயாளிகளுக்கு தடை விதித்த கிராமம்
கோவை:
கோவை மாவட்டம் தேவராயபுரம் என்ற கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள எய்ட்ஸ் நோயாளிகள் பராமரிப்புமையத்தால் அங்கு பெரும் பிரச்சனை வெடித்துள்ளது.
இந்த நோயாளிகளுக்கு உணவுப் பொருள் கொடுக்கவும், ஊருக்குள் நடமாடவும் கிராம மக்கள் தடைவிதித்துள்ளதால் ஏராளமான எய்ட்ஸ் நோயாளிகள் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தேவராயபுரத்தில் அரசு சார்பில் எய்ட்ஸ் நோயாளிகள் பராமரிப்பு மையம் உள்ளது. இங்கு எய்ட்ஸ் நோயாளிகள்தங்க வைக்கப்பட்டு சிகிச்சையும், மரண பயத்தில் இருந்து மீள்வதற்காக மன பலம் பெறுவதற்கான பயிற்சிகளும்தரப்படுகின்றன.
இந்த மையத்தைச் சேர்ந்த நோயாளிகள் ஊருக்குள் சுதந்திரமாக சுற்றி வந்தார்கள். கடைகளில் உணவுப்பொருட்களை வாங்கிக் கொள்வது, சலூன்களில் சவரம் செய்து கொள்வது என பிற மக்களைப் போல இயல்பாகவாழ்ந்து வந்தனர்.
ஆனால், இப்போது அதற்கு தடை வந்து விட்டது.
இந்த எய்ட்ஸ் நோயாளிகளால் தங்களுக்கும் எய்ட்ஸ் பரவி விடும் என்று அச்சமடைந்துள்ள ஊர் மக்கள்அவர்களை ஊருக்குள் நடமாட விடாமல் தடுத்து வருகின்றனர்.
கடைகளில் உணவுப் பொருட்கள் கொடுக்கக் கூடாது, சலூன் கடைகளில் இவர்களுக்கு சவரம் செய்யக் கூடாதுபோன்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். மேலும் ஊருக்குள் நடமாடவும் கூட எய்ட்ஸ் நோயாளிகளுக்குத் தடைவிதித்துள்ளனர்.
மேலும், இந்த மையத்தை உடனடியாக இங்கிருந்து வேறு இடத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அந்தகிராம மக்கள் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கிராம மக்கள் மனுவும் அனுப்பியுள்ளனர்.
கிராம மக்களின் இந்த திடீர் எதிர்ப்பால் மனமுடைந்து போயுள்ள எய்ட்ஸ் நோயாளிகள் மனரீதியாகபாதிக்கப்பட்டுள்ளனர்.
எஸ்ட்ஸ் நோயாளிகள் குடித்த டம்ளரில் நாமும் டீ குடித்தால் நமக்கும் அந்த நோய் வந்துவிடும் என்பது போன்றஅறியாமை காரணமாக கிராம மக்கள் இவர்களை ஒதுக்க ஆரம்பித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications