பாபா வன்முறை: தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை:
பாபா படம் தொடர்பாக தமிழகத்தில் நடந்த வன்முறைகள் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டவழக்கில் 3 வாரத்தில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாபா படத்தைப் பார்க்கக் கூடாது என்று தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் இந்தப் படம் வெளியிடப்பட்ட தியேட்டர்களில்நடந்த கலவரத்துக் காரணமானவர்களை தண்டிக்கக் கோரியும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் சூர்யப் பிரகாசம் இந்த மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி கோவிந்தராஜன்ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இதனை விசாரித்தது.
தமிழக அரசின் உள்துறைச் செயலாளர், காவல்துறை டி.ஜி.பி. ஆகியோர் இந்த வழக்குக்கு 3 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இது தொடர்பான நோட்டீஸ்கள் இந்த இருவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னதாக வழக்கறிஞர் சூர்யப் பிரகாசம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
பாபா படத்தைப் பார்க்கக் கூடாது என்று வன்முறை மூலம் மக்களிடையே சிலர் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளனர். இது மக்களின்அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. ஆனால், இதை தமிழக அரசும் போலீசாரும் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர்.
இது வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சனையாகக் கருதி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது மக்களின் அடிப்படை உரிமைதொடர்பான பிரச்சனையாகும்.
ரஜினிகாந்த் குறித்து பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாசுக்கு தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால், அவரது பேச்சுவன்முறையத் தூண்டிவிட்டுள்ளது. படப் பெட்டிகள் கடத்தப்படுகின்றன.
ஆனால், இதை அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. இந்த சமூக விரோத சக்திகள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துள்ளன. பா.ம.கவின் இச்செயல் மக்களின் ஜனநாயக உரிமையை பறிக்கும் செயலாகும். இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்என்று கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications