பெண் காவலர்களிடம் செக்ஸ் தொல்லை: திருவள்ளூர் எஸ்.பி. சஸ்பெண்ட்
சென்னை:
பெண் டிஎஸ்பிக்களிடம் முறைகேடாக நடந்ததற்காகவும், பொதுமக்களிடம் லஞ்சம் கேட்டு மிரட்டியதற்காகவும்திருவள்ளூர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி, தேனி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் முன்பு எஸ்.பியாக இருந்தவர் ராஜேஷ் தாஸ்.
அப்போதும் பல பெண் சப் இன்ஸ்பெக்டர்கள், பெண் டிஎஸ்பிக்கள், பெண் காவலர்களிடம் செக்ஸ் தொல்லை தந்துவந்தார். மேலும் தனக்குக் கீழ் உள்ள காவலர்களை அவர் அடித்ததாகவும் கூட புகார்கள் வந்தன.
அவர் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியாக இருந்தபோது ஒரு பெண் காவலரை கையைப் பிடித்து இழுத்துபலவந்தப்படுத்த முயன்றார். ஆனால், அப்போது இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அதற்குப் பதிலாக தமிழ்நாடு சிறப்புக் காவல் படையின் பெண்கள் பிரிவு தூத்துக்குடியில் இருந்து ஒட்டுமொத்தமாகதிருநெல்வேலிக்கு மாற்றப்பட்டது.
இந் நிலையில் சமீபத்தில் அவர் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பியாக பொறுப்பேற்றார். திருத்தணி அருகே துப்பாக்கிச்சுடும் கேந்திரம் அமைப்பதற்காக பொதுமக்களிடம் கட்டாய பண வசூலில் ஈடுபடுமாறு போலீசாருக்கு இவர்உத்தரவிட்டதாகத் தெரிகிறது. இதனால் அந்தப் பகுதி மக்கள் அரசுக்கு புகார்களை அனுப்பினர்.
இந் நிலையில் செங்கல்பட்டு சரகத்தைச் சேர்ந்த இரண்டு பெண் டி.எஸ்.பிக்களிடம் ராஜேஷ் தாஸ் தவறாக நடக்கமுயன்றுள்ளார்.
இந்த பெண் டிஎஸ்பிக்களிடம் ராஜேஷ் தாஸ் செக்ஸ்ரீதியில் தொல்லை தந்தது குறித்து ஐஜி திலகவதி விசாரணைநடத்தினார்.
இதைத் தொடர்ந்து ராஜேஷ் தாஸை சஸ்பெண்ட் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications