ரகுபதி வீட்டில் சிக்கிய 600 பவுன் தங்கம்: நீதிமன்றத்தில் ஒப்படைப்பு
புதுக்கோட்டை:
முன்னாள் அமைச்சர் ரகுபதியின் வீட்டிலும் வங்கி லாக்கர்களிலும் கைப்பற்றப்பட்ட தங்க-வைர நகைகள்,வெள்ளிப் பாத்திரங்கள் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் புதுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில்ஒப்படைக்கப்பட்டன.
முன்னாள் திமுக அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், ஜெனிபர் சந்திரன், அதிமுக அமைச்சராக இருந்து பின்னர்திமுகவுக்குத் தாவிய ரகுபதி மற்றும் எம்.எல்.ஏவான ரங்கநாதன் ஆகியோரின் வீடுகளில் சமீபத்தில் லஞ்ச ஒழிப்புபோலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
புதுக்கோட்டையில் உள்ள ரகுபதியின் வீட்டிலும் வங்கி லாக்கர்களிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.இதில் அவருடைய வருமானத்தை மீறிச் சேர்க்கப்பட்டதாகக் கருதப்படும் ஏராளமான தங்க-வைர நகைகள்,வெள்ளிப் பாத்திரங்கள் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை கைப்பற்றப்பட்ட பொருட்களை போலீசார் புதுக்கோட்டைநீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். ஒப்படைக்கப்பட்ட பொருட்களின் பட்டியல் அன்று இரவு முழுவதும்சரிபார்க்கப்பட்டன.
அதன்படி 600 பவுன் தங்க நகைகள், ரூ.25 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள், ரூ.6.25 லட்சம் ரொக்கம், 35 கிலோவெள்ளிப் பாத்திரங்கள், வங்கி லாக்கர்களில் கைப்பற்றப்பட்ட ரூ.55 லட்சத்துக்கான பாஸ்புக் மற்றும் ரசீதுகள், ரூ.3லட்சத்திற்கான வங்கி டி.டி., சொத்து ஆவணங்கள் மற்றும் வீடியோ கேசட்டுகள் ஆகியவை நீதிமன்றத்தில்ஒப்படைக்கப்பட்டன.
இதற்கிடையே புதுக்கோட்டையில் உள்ள பல வங்கிகளிலும் உள்ள ரகுபதியின் லாக்கர்களில் லஞ்ச ஒழிப்புபோலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.