கல்லூரி ஆசிரியர் ஸ்டிரைக்: ஒரு பிரிவினர் மட்டும் வாபஸ்
சென்னை:
பல்கலைக்கழகங்களுடன் அரசுக் கல்லூரிகள் இணைக்கப்பட்டாலும் அதன் ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்புக்காக குழு ஒன்று அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறிய உறுதிமொழியைத் தொடர்ந்துதங்களுடைய காலவரையற்ற போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அரசு கல்லூரி ஆசிரியர்கள்சங்கத்தின் ஒரு பிரிவினர் முடிவு செய்துள்ளனர்.
அரசு கல்லூரி ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் நேற்று ஜெயலலிதாவைச் சந்தித்து இதுகுறித்து பேச்சுவார்த்தைநடத்தினர்.
பேச்சுவார்த்தை ஆரம்பிக்கும் போதே, தமிழகத்தில் உள்ள 67 அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன்இணைக்கும் முடிவில் எந்த மாற்றமும் கிடையாது என்று கூறிவிட்டுத் தான் பேச்சையே துவக்கினார் ஜெயலலிதா.
இதைத் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது அரசுக் கல்லூரி ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு, ஊதியப் பாதுகாப்பு, டி.ஏ.மற்றும் ஓய்வூதியம் ஆகியவை குறித்து முடிவு செய்வதற்காக ஒரு குழு அமைக்கப்படும் என்று ஜெயலலிதாஉறுதியளித்தார்.
இந்தக் குழுவிடம் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளைக் கூறலாம் என்றும் முதல்வர் கூறினார். இந்தக் குழுவின்பரிந்துரையைப் பொறுத்து ஆசிரியர்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து முடிவு செய்யப்படும் என்றும்ஜெயலலிதா தெரிவித்தார்.
பேச்சுவார்த்தையின் போது தமிழக கல்வி அமைச்சர் தம்பித்துரை மற்றும் தலைமைச் செயலாளர் சுகவனேஸ்வர்ஆகியோரும் உடன் இருந்தனர்.
இந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அரசுக் கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் ஒரு பிரிவான அரசு கல்லூரிஆசிரியர் மன்றம் கூடி விவாதித்தது. ஆசிரியர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று அரசு கூறியுள்ளதால்வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இருந்தாலும் வரும் செப்டம்பர் 3ம் தேதி திட்டமிட்டபடி மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அரசு கல்லூரிஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஆனாலும் இதுகுறித்து இன்று மாலைக்குள் இறுதி முடிவெடுக்கப்படும்என்றும் அதன் தலைவர் பெருமாள் இன்று கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications