தப்பியோடிய 3 கைதிகள் சிக்கினர்
Subscribe to Oneindia Tamil
மன்னார்குடி:
போலீஸ் காவலிலிருந்து தப்பியோடிய 3 கைதிகள் மன்னார்குடியில் வைத்துக் கைது செய்யப்பட்டனர்.
மகேந்திரன், அருண் ஆகிய இருவரும் வேலு என்பவரைக் கொலை செய்த குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
கடந்த மாதம் திருச்சி ஜெயிலுக்குக் கொண்டு செல்லும் வழியில் இருவரும் போலீஸாரின் பிடியிலிருந்து தப்பினர்.
தப்பிய இருவரும் பல்வேறு திருட்டுக்களில் ஈடுபட்டு வந்தனர். தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின் இருவரையும்போலீஸார் கைது செய்தனர்.
அதேபோல, மயிலாடுதுறையிலிருந்து தப்பியோடிய கைதியான பழனி என்ற 16 வயது சிறுவன், சிங்கப்பூருக்குச்சென்று விட்டான்.
இந்நிலையில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவன் திருப்பூர் வந்திருந்தபோது போலீஸார் அவனைக் கைதுசெய்தனர்.












Click it and Unblock the Notifications