காட்டுப் பகுதியில் ரகசிய காமெராக்கள்
சத்தியமங்கலம்:
வீரப்பனைப் பிடிக்க புதிய உத்திகளை அதிரடிப்படையினர் கடை பிடிக்க ஆரம்பித்துள்ளனர்.
வீரப்பன் நடமாட்டம் இருக்கும் எனக் கருதப்படும் பகுதிகளில் ரகசிய காமெராக்கள் பொறுத்தும் பணியை அதிரடிப்படை ஆரம்பித்துள்ளது.அதே போல உயரமான கண்காணிப்புக் கூடாரங்களும் வனப் பகுதியில் ஆங்காங்கே அமைக்கப்பட்டு அதில் மிக சக்தி வாய்ந்தபைனாகுலர்ளும் பொறுத்தப்பட்டு வருகின்றன.
நாகப்பாவின் மாவட்டமான சாம்ராஜ் நகரில் இன்னும் பதற்றமான சூழ்நிலையே நிலவுகிறது. இதையடுத்து அவரது சொந்த ஊரானகாமகெரே மற்றும் சுற்றுப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான போலீசார் தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
காட்டுக்குள் விறகு பொருக்க, ஆடு மேய்க்கச் செல்ல வேண்டாம் என இரு மாநில எல்லைப் பகுதி கிராம மக்களுக்கும்உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மலைவாசி மக்களும் காட்டுப் பகுதியில் நடமாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்தகாட்டை நம்பியுள்ள மக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications