அவமானம் போதவில்லையா: திமுக பதிலடி
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதிக்கும் நாகப்பா கடத்தலுக்கும் தொடர்பு உள்ளதாக சந்தேகப்படுவதாக கூறியுள்ளதன்மூலம் கருணாநிதிக்கு எதிரான அவதூறுப் பிரசாரத்தில் ஜெயலலிதா ஈடுபட்டுள்ளார் என திமுக பொதுச் செயலாளர்அன்பழகன் கடுமையாக சாடியுள்ளார்.
இது தொடர்பாக அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
சோனியா காந்தியை தாறுமாறாக விமர்சிக்கப் போய், அவர் பிரதமராக ஜெயலலிதா ஆதரவு கொடுத்த கடிதத்தைகாங்கிரஸ் கட்சி வெளியிட்டு விட்டது. இதனால் ஏற்பட்ட விரக்தி, அவமானம் தாங்காமல் கருணாநிதி மீது சேற்றைவீசியுள்ளார் ஜெயலலிதா.
கோவாவுக்கு கருணாநிதியும், துரைமுருகனும் மட்டும் போகவில்லை. கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளும்போயிருக்கிறார்.
கருப்புப் பூனைப் படையினர் தவிர, கோவா மாநில உயர் காவல் அதிகாரிகளும் கருணாநிதிக்குப் பாதுகாப்பாகஅங்கு உள்ளனர்.
தொல்காப்பியத்திற்கு உரை எழுதிக் கொண்டிருக்கும் கருணாநிதி, இடையூறு இல்லாமல் எழுதுவதற்காகவேபெங்களூர் போனார். இப்போதும் அதற்காகவே கோவா போயுள்ளார்.
உண்மை இப்படியிருக்க அவதூறாக கருணாநிதி மீது புகார் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாகஎந்தவித விசாரணைக்கும் திமுக தயாராகவே உள்ளது.
அந்த விசாரணையின் முடிவில் ஜெயலலிதாவின் முகத்திரை தான் கிழியுமே தவிர, கருணாநிதிக்கோ திமுகவுக்கோஎந்தவிதமான பங்கமோ, பாதிப்போ நிகழாது.
தமது பொறுப்புக்கு உள்ள மதிப்பைக் காப்பாற்றிக் கொள்ளாமல் மக்கள் பிரச்சனைகளைத் திசைதிருப்புவதற்காகவே அவர் இவ்வாறு தேவையற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறார் என்று கூறியுள்ளார்அன்பழகன்.












Click it and Unblock the Notifications