வீரப்பனுடன் கருணாநிதிக்கு தொடர்பு: ஜெ. புகார்
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனை சந்திக்க ரகசியமாக திமுக தலைவர் கருணாநிதி முயலுவதாக கருதுவதால், அவரதுநடமாட்டத்தைக் கண்காணிக்குமாறு உளவுப் பிரிவு போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வர்ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கருணாநிதியின் செயல்பாடுகள் பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. அவருக்கும் வீரப்பனுக்கும்தொடர்புகள் இருக்கலாம் என்றே கருதுகிறேன்.
தற்போது கருணாநிதியும், முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் கோவா சென்றுள்ளனர். ஆனால் அங்கிருந்துஅவர்கள் இருவரும் ரகசியமாக பெங்களூர் சென்று வீரப்பனை சந்திக்க முயற்சிக்கலாம் என்று நான்சந்தேகப்படுகிறேன்.
எனவே கருணாநிதி மற்றும் துரைமுருகனின் நடமாட்டத்தைக் கண்காணிக்குமாறு உளவுப் பிரிவு போலீஸாருக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.
நாகப்பா கடத்தலுக்கும், கருணாநிதி-துரைமுருகனுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கூட நான்சந்தேகப்படுகிறேன். கடந்த 6ம் தேதி இந்த இரண்டு பேரும் பெங்களூர் சென்றனர். 10ம் தேதி தான் சென்னைதிரும்பினர்.
இவர்கள் சென்னை திரும்பிய பிறகு தான் நாகப்பா கடத்தப்பட்டுள்ளார். துரைமுருகனும், வீரப்பனும்வன்னியர்கள். எனவேதான் இருவருக்கும் வீரப்பனுடன் தொடர்பு இருக்கலாம் என்று கருதுகிறேன்.
மீண்டும் ஒரு முறை பெங்களூர் செல்ல கருணாநிதி விரும்பினார். ஆனால் இப்போது போனால் சந்தேகம்வலுப்பட்டு விடும் என்பதால் இருவரும் கோவா சென்று அங்கிருந்து ரகசியமாக பெங்களூர் செல்ல முடிவுசெய்துள்ளனர் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications