புலிகள் மீதான தடையை நீக்க வைகோ கோரிக்கை
சென்னை:
தாய்லாந்தில் நடந்து வரும் பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறவும், இலங்கைத் தமிழர்களுக்கு நல்வாழ்வு கிடைக்கவும்விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கைவிடுத்துள்ளார்.
1984ம் ஆண்டு திமுகவினர் மீது நடந்த தாக்குதல் தொடர்பான வழக்கில் வைகோவும் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த வழக்குவிசாரணை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணை இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது. இதையடுத்து மயிலாடுதுறை நீதிமனறத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்வைகோ.
இதற்காக வேலூர் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அவர் நேற்றே திருச்சி சிறைக்குக் கொண்டு வரப்பட்டார். இரவு அங்குதங்க வைக்கப்பட்ட அவர் இன்று காலை மயிலாடுதுறை கொண்டு வரப்பட்டார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு இந்த வழக்குத் தொடர்பான எப்.ஐ.ஆரின் நகல் வழங்கப்பட்டது. பின்னர் வழக்குவிசாரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி.
இதையடுத்து மீண்டும் வேலூர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார் வைகோ. முன்னதாக அவரைக் காண நூற்றுக்கணக்கானமதிமுகவினர் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் கூடியிருந்தனர்.
அவர்களை நோக்கி கையசைத்தவாரே வைகோ நீதிமன்றத்துக்குள் சென்றார்.
பின்னர் தனது வழக்கறிஞர் நன்மாறன் மூலமாக அங்கு கூடியிருந்த நிருபர்களிடம் ஒரு அறிக்கையை வெளியிட்டார் வைகோ.அதில் அவர் கூறியிருப்பதாவது:
தாய்லாந்து அமைதி பேச்சு வெற்றி பெற இந்தியா உதவ வேண்டும். அந்தக் கடமை இந்தியாவுக்கு உண்டு. இந்தப் பிராந்தியத்தின்அமைதியைக் கருத்தில் கொண்டும் புலிகள் மீதான தடையை மத்திய அரசு நீக்க வேண்டும்.
கடந்த 50 ஆண்டுகளாய் ஒடுக்கப்பட்டு வந்த இலங்கைத் தமிழ் மக்களுக்கு இந்தப் பேச்சுவார்த்தைகள் ஒரு விடியலாகும்.இதன்மூலம் நல்ல காலம் பிறக்கும் என்ற நம்பிக்கை எல்லோர் மனதிலும் ஓங்கி நிற்கிறது.
அதே போல பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர் பகுதிகளை மறு சீரமைக்கவும் இந்தியா உதவ வேண்டும். இலங்கைத்தமிழர்கள் அமைதியாக வாழ உதவ வேண்டியது இந்தியாவின் கடமை.
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை கர்நாடகம் அவமதித்து வருகிறது. விவசாயிகளைத் தூண்டிவிட்டு அணையைை மூடச்செய்து தமிழகத்தை ஏமாற்றி வருகிறது கர்நாடகம்.
தமிழகத்துக்கு நியாயமான தண்ணீர் கிடைக்கச் செய்ய அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி முதல்வர் ஜெயலலிதா விவாதிக்கவேண்டும். அதைச் செய்யாமல் எதிர்க்கட்சிகளை வசை பாடுவதை ஜெயலலிதா கைவிட வேண்டும். மாநிலத்தின் நலனைகெடுக்கக் கூடாது. எதிர்க் கட்சிகளை அவமதிப்பதை ஒரு வேலையாக செய்து வருகிறார் ஜெயலலிதா.
இவ்வாறு தனது அறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.
இதற்கிடையே வைகோ கைதை எதிர்த்து திருச்சியில் இருந்து நடை பயணமாகப் புறப்பட்ட நூற்றுக்கணக்கான மதிமுகதொண்டர்கள் நேற்று வேலூர் வந்து சேர்ந்தனர். இக் குழுவின் பிரதிநிதிகள் வைகோவை சிறையில் சென்று சந்தித்துப் பேசினர்.