Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமைச்சரின் அதிரடி சோதனைகள்: ரயில்வே அதிகாரிகள் "திக் திக்"

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை ரயில் நிலையத்தின் அனைத்துப் பகுதிகளையும் சுற்றிப் பார்த்த ரயில்வேத்துறை இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, அதிகாரிகளுக்கு அவ்வப்போது சூடும் கொடுத்தார்.

தமிழகத்திலேயே சிறப்பான, சுத்தமான ரயில் நிலையம் என்று அடிக்கடி பெயர் வாங்கிக் கொண்டிருக்கும் மதுரைரயில் நிலையத்திலும் உள்ள பல்வேறு குறைகளை மூர்த்தி கண்டுபிடித்தார்.

பிளாட்பாரத்தில் நடந்து பார்வையிட்டுக் கொண்டிருந்த அவர் அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு கடையில் திடீரென்றுநின்று அங்கு வைக்கப்பட்டிருந்த மினரல் தண்ணீர் பாட்டில்களைச் சோதனையிட்டார்.

அப்போது அங்குள்ள ஏராளமான பாட்டில்கள் ஒழுகிக் கொண்டிருப்பதைப் பார்த்து கோபமடைந்த மூர்த்தி, அந்தக்கடைக்கான உரிமையை ரத்து செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதே போல் ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாமல் விற்கப்படும் பாட்டில்களை உடனடியாகப் பறிமுதல் செய்யவும் அவர்உத்தரவிட்டார்.

பின்னர் போர்ட்டிகோ அருகே மின்னிக் கொண்டிருந்த "மொபைல் போன்" விளம்பரப் பலகையைப் பார்த்து,இதற்கான மின் கட்டணத்தை செலுத்துவது யார் என்று கேட்டார்.

தொடர்ந்து, அங்குள்ள போர்ட்டிகோ முழுவதையும் அந்த மொபைல் போன் கம்பெனியே கிரானைட் கற்களைப்போட்டு அழகுபடுத்த வேண்டும் என்றும் அவர்களே மின் கட்டணத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றுஉத்தரவிட்ட மூர்த்தி, அந்த கான்ட்ராக்டை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்றும் கூறினார்.

அதன் பின்னர் பிளாட்பாரத்தில் உள்ள ஒரு சிமெண்ட் பெஞ்ச்சில் உட்கார்ந்து பார்த்த மூர்த்தி, "என்ன பெஞ்ச் இது?சாய்ந்து உட்காருவதற்கு வசதியாக ஒரு சாய்மானம் கூட இல்லையென்றால் பயணிகளுக்கு அசெளகரியமாகஇருக்காதா?" என்று கேட்டுக் கொண்டே, அந்த சிமெண்ட் பெஞ்ச்சுகளுக்குப் பதிலாக சேர்களைப் போட வேண்டும்என்றும் உத்தரவிட்டார்.

பிளாட்பாரங்களில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களையும் டம்ளர்களையும் மாற்ற வேண்டும் என்றும் மூர்த்திஉத்தரவிட்டார்.

பின்னர் அங்கிருந்த ரயில்வே போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றார் மூர்த்தி. சமீபத்தில் பெங்களூருக்கு ரயில்களில்கடத்தப்பட்ட கள்ளச் சாராயம் பறிமுதல் செய்யப்பட்ட போது எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டது என்று அவர்கேட்டறிந்தார்.

அமைச்சரின் அடுக்கடுக்கான சோதனைகளால் மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகள் மிகவும் அரண்டு தான்போய்விட்டனர். இருந்தாலும் மூர்த்தியின் இத்தகைய நடவடிக்கைகளால் மதுரை ரயில் நிலையம் மேலும் பொலிவுபெறும்.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+