ராமதாசுக்கு போலீஸ் பிடிவாரண்ட்
Subscribe to Oneindia Tamil
மயிலாடுதுறை:
வேதப் பள்ளிகளைத் திறந்தால் குண்டு வைப்பேன் என்று பேசியதாக டாக்டர் ராமதாஸ் மீது தொடரப்பட்டுள்ளவழக்கில் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு போலீஸாருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் 9 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பாட்டாளி மக்கள் கட்சிக் கூட்டத்தில்,
தமிழக அரசு வேதாகப் பள்ளிகளைத் திறந்தால் அவற்றை குண்டு வைத்துத் தகர்ப்பேன் என்று ராமதாஸ்பேசியதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கு விசாரணை புதன்கிழமை மயிலாடுதுறை கோர்ட்டில் வந்தது. அப்போது ராமதாஸ் ஆஜராகுமாறுகோரப்பட்டிருந்தார். ஆனால் அவர் வரவில்லை.
இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
-->












Click it and Unblock the Notifications