சென்னையில் கடையை உடைத்து ரூ.4 லட்சம் கடிகாரங்கள் கொள்ளை
சென்னை:
சென்னையில் பரபரப்பு மிகுந்த வடபழனி பகுதியில் உள்ள ஒரு கடிகாரக் கடையின் கதவை உடைத்து ரூ.4 லட்சம்மதிப்புள்ள கடிகாரங்களை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.
சென்னையின் பரபரப்பு மிகுந்த பகுதிகளில் ஒன்று வடபழனி. இங்குள்ள 100 அடி ரோட்டில் ஒரு பெரிய கடிகாரக்கடை இருந்தது.
இக்கடையின் பக்கத்தில் உள்ள ஒரு மெக்கானிக் கடையில் உள்ள ஒரு சிறுவன் இன்று காலை வந்து பார்த்த போது,அந்தக் கடையின் ஷட்டர் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டான்.
உடனே கடிகாரக் கடையின் உரிமையாளரிடம் அந்தச் சிறுவன் தகவல் கொடுத்தான்.
விரைந்து வந்த கடிகாரக் கடையின் உரிமையாளர் கடைக்குள் சென்று பார்த்த போது, அங்கிருந்த ஏராளமானகைக்கடிகாரங்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
நேற்று நள்ளிரவில் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் டைட்டன் உள்ளிட்ட நல்லதரம் வாய்ந்த பிராண்ட் கைக்கடிகாரங்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கொள்ளையடிக்கப்பட்ட கடிகாரங்களின் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என்று அந்தக் கடையின் உரிமையாளர்தெரிவித்தார்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து வடபழனி போலீசார் தீவிரமாக விசாரித்து கொள்ளையர்களைத் தேடிவருகின்றனர்.












Click it and Unblock the Notifications