வறுமையின் கொடுமை: குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை
சென்னை:
சென்னையில் வறுமையின் கொடுமை தாங்க முடியாமல் தன் 2 வயது மகனுடன் ரயில் முன் பாய்ந்து ஒரு பெண்தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை வியாசர் பாடியைச் சேர்ந்த பழனி என்பவர் ஒரு கூலித் தொழிலாளி. இவரது மனைவி கஸ்தூரி.இவர்களுக்கு நந்தினி என்ற 5 வயது பெண் குழந்தையும், விக்கி என்ற மகனும் உள்ளனர்.
பழனிக்கு அடிக்கடி வேலையில்லாமல் போனதால் குடும்பம் வறுமையில் வாடியது. இது போதாதென்று அடிக்கடிபழனிக்கும், கஸ்தூரிக்கும் சண்டை வேறு வந்துள்ளது.
இதனால் வெறுத்துப் போன கஸ்தூரி, தனது 2 குழந்தைகளுடனும் வியாசர்பாடி ரயில் தண்டவாளத்தில் வந்த ரயில்முன் பாய்ந்தார். இதில் கஸ்தூரியும், விக்கியும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
நிந்தினி மட்டும் படுகாயத்துடன் உயிர் தப்பினாள். அவள் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளாள்.
வடிவேலு ஸ்டைலில் அலம்பிய ரவுடி:
இதற்கிடையே குடி போதையில் டீக்கடையை சூறையாடிய ரவுடியை போலீஸார் தேடி வருகிறார்கள்.
வடிவேலு ஒருபடத்தில் சாராயக்கடைக்குப் போய் குடித்து விட்டு படு அலம்பல் அலம்பி கடையையேசூறையாடுவார். அதே ஸ்டைலில் ஒரு ரவுடி சென்னை டீக் கடையை துவம்சம் செய்துள்ளார்.
அமிஞ்சிக்கரையைச் சேர்ந்த ராமு அந்தப் பகுதியில் பெரிய ரவுடி. நன்றாகக் குடித்து விட்டு எழும்பூரில் உள்ளதனது சகோதரி வீட்டுக்கு சென்றார் ராமு.
அப்போது சாமி ரெட்டித் தெரு பகுதியில் ஒரு டீக்கடைக்குப் போனார். அங்கு டீ கேட்டார். அவர்கள்கொடுக்கவில்லை. எனக்கா டீ கொடுக்கவில்லை என்று கூறி கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தஒவ்வொருவரையும் அடித்து விரட்டினார்.
பின்னர் டீக்கடையில் இருந்த பாய்லர், சேர், டேபிள், கண்ணாடி பாட்டில்களை தூக்கி வீசி கடையையே துவம்சம்செய்தார். சில நிமிடங்களில் கடையே சிதறிப்போனது. இதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் ராமுஅங்கிருந்து போய் விட்டார்.
இதையடுத்து தலைமறைவாகியுள்ள ராமுவை போலீஸார் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications