ஜெயா டி.வி. ஊழியர்கள் போல் நடித்து ஏமாற்றிய கும்பல் கைது
திண்டுக்கல்:
ஜெயா டி.வி. ஊழியர்கள் போல் நடித்து அதே நிறுவனத்தின் உள்ளூர் நிருபரிடம் அழகான பெண் ஒன்றுவேண்டும் என்று கேட்ட 8 பேர் கொண்ட ஒரு கும்பலைப் போலீசார் கைது செய்தனர்.
சென்னையிலிருந்து மதுரைக்கு இன்று காலை எட்டு பேர் வந்து சேர்ந்தனர். அங்கிருந்து ஒரு வேனை வாடகைக்குஎடுத்துக் கொண்டு திண்டுக்கல் கிளம்பினர்.
அவர்கள் வீடியோ காமிரா உள்ளிட்ட ஷூட்டிங் நடத்துவதற்கான அனைத்துக் கருவிகளையும் வைத்திருந்தனர்.
திண்டுக்கல் வந்து சேர்ந்த அந்தக் கும்பல், அங்குள்ள உள்ளூர் ஜெயா டி.வி. நிருபரைச் சந்தித்தனர். விரைவில்ஒளிபரப்பாகவுள்ள ஒரு நிகழ்ச்சியின் படப்பிடிப்புக்காக ஒரு அழகான பெண்ணை ஏற்பாடு செய்யுமாறு அந்தநிருபரிடம் அவர்கள் கூறினர்.
அந்தக் கும்பலின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த திண்டுக்கல் நிருபர், உடனடியாக அவர்களுக்குத் தெரியாமல்சென்னைக்கு போன் செய்து ஜெயா டி.வி. தலைமையகத்திடம் இதுகுறித்து விசாரித்தார்.
திண்டுக்கல்லுக்கு எந்தக் குழுவையும் நாங்கள் அனுப்பவில்லையே என்று சென்னையிலுள்ள ஜெயா டி.வி.அலுவலகம் தெரிவித்தது.
சரி, நாம் சந்தேகப்பட்டது சரியாகத் தான் போய்விட்டது என்று நினைத்துக் கொண்டே அந்த நிருபர் உடனடியாகப்போலீசாருக்குத் தகவல் கொடுத்தார். பின்னர் ஒன்றுமே தெரியாதவர் போல் வந்திருந்த மோசடிக் கும்பலிடம்பேசிக் கொண்டிருந்தார்.
சிறிது நேரத்திலேயே வந்த போலீசார் அந்த போலி டி.வி. கும்பலைச் சேர்ந்த எட்டு பேரையும் சுற்றி வளைத்துக்கைது செய்தனர்.
டி.வி. காமிரா உள்ளிட்ட அனைத்துப் பொருள்களையும் அவர்கள் வாடகைக்குத் தான் எடுத்துக் கொண்டுவந்ததாக விசாரணையின் போது தெரிய வந்தது. அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட எட்டு பேரையும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications