"தமிழ் நடிகர்களை விரட்டியடிப்போம்": ராஜ்குமார் ரசிகர்கள் மிரட்டல்
பெங்களூர்:
கன்னடர்களின் சுயமரியாதையை உரசிப் பார்க்கும் தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் பெங்களூர் வந்தால்விரட்டியடிப்போம் என்றும் நெய்வேலியிலிருந்து கர்நாடகத்திற்கு வரும் மின்சாரத்தை ரத்து செய்தால்கர்நாடகத்தில் தமிழ்ப் படங்களைத் திரையிட விட மாட்டோம் என்று கன்னட நடிகர் ராஜ்குமாரின் ரசிகர்கள்மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக ராஜ்குமார் அபிமானிகள் சங்கம் வெளிட்டுள்ள அறிக்கை:
காவிரியில் கர்நாடகம் நீர் திறந்துவிடாவிட்டால் நெய்வேலியிலிருந்து அம்மாநிலத்துக்கு செல்லும் மின்சாரத்தைதுண்டிக்கச் சொல்லி போராட்டம் நடத்துவோம் என்று தமிழ் திரையுலகம் அறிக்கை விட்டிருப்பதைக் கடுமையாகஆட்சேபிக்கிறோம்.
ஐந்து கோடி கன்னடர்களின் கருத்துக்களுக்கு எதிராகவும் கன்னட சினிமா உலகை மதிக்காமலும் தமிழகத்தில்போராட்டம் நடத்தினால் பெங்களூரில் தமிழ் சினிமாக்களை திரையிட விடாமல் தடுப்போம்.
கன்னடர்களின் சுயமரியாதையை உரசிப் பார்க்கும் தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் பெங்களூர் வந்தால்விரட்டியடிப்போம்.
ஆகவே தமிழ் நடிகர்கள் சங்கம் தன் போராட்டத்தை திருப்பிப் பெற்று மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று அந்தஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே பாரதிராஜாவின் அறிக்கைக்கு கர்நாடக திரையுலகினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.தமிழ்த் திரையுலகினரின் போராட்டம் தொடர்ந்தால் கர்நாடகத்தில் தமிழ்ப் படங்களைத் திரையிட அனுமதிக்கமாட்டோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications