கஞ்சா விற்பதில் தகராறு: கடலூர் சிறையில் கைதிகளிடையே பயங்கர மோதல்
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கடலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கிடையே கஞ்சா விற்பதில் ஏற்பட்ட தகராறு பெரும் கலவரமாக மூண்டது.இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி மோதலைத் தடுத்தனர்.
கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனைக் கைதிகளுக்கும், பிற கைதிகளுக்கும் இடையேஇன்று காலை திடீர் மோதல் ஏற்பட்டது.
கஞ்சா விற்பதில் ஏற்பட்ட போட்டி காரணமாகத் தான் கைதிகள் இரண்டு கோஷ்டிகளாக மாறி ஒருவரை ஒருவர்தாக்கிக் கொண்டனர்.
இதில் 3 கைதிகள் காயமடைந்தனர். போலீஸார் கைதிகளை விலக்கிப் பார்த்தனர். ஆனால் முடியவில்லை.
இதையடுத்து தடியடி நடத்திக் கைதிகளை விரட்டினர். இதுதொடர்பாக 7 கைதிகள் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த சிறையில் தான் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications