காஞ்சிபுரத்தில் திடீர் வன்முறை: அரசு பஸ்சுக்கு தீ வைப்பு
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் நேற்று இரவு ஒரு கும்பல் பயங்கர வன்முறையில் ஈடுபட்டு அங்கிருந்தவர்களைக்கண்மூடித்தனமாகத் தாக்கி, பஸ்களுக்கும் தீ வைத்தது.
காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் உள்ள ஒரு இனிப்புக் கடையின் உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாகசெய்தி பரவியது.
இதையடுத்து கடை உரிமையாளரின் ஆதரவாளர்கள், சொந்தக்காரர்கள் என 100 பேருக்கும் மேல் பஸ்நிலையத்திற்குத் திரண்டு வந்தனர்.
அங்கு பஸ்சுக்காகக் காத்துக் கொண்டு நின்ற பயணிகளை அவர்கள் தாக்கினர். இதனால் பயணிகள் அலறிஅடித்துக் கொண்டு ஓடினர்.
அங்கிருந்த வாகனங்களையும் அந்தக் கும்பல் விடவில்லை. ஒரு அரசு பஸ்சுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் பஸ்சின்டயர்கள் எரிந்தன. பஸ் நிலையத்தில் இருந்த கடைகளையும் தாக்கி உடைத்தனர்.
தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்தனர். மூன்று பேர் மட்டுமே போலீஸாரின் பிடியில் சிக்கினர்.
இந்த திடீர் வன்முறையால் பஸ் நிலையத்தில் காத்திருந்த வெளியூர்ப் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.