சென்னை-பிரிட்டன் விமான எண்ணிக்கை அதிகரிப்பு
சென்னை:
சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களிலிருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் 7 கூடுதல்விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது.
தென் இந்தியாவிலிருந்து, குறிப்பாக, சென்னையிலிருந்து இங்கிலாந்துக்கு வருபவர்களின் எண்ணிக்கைதொடர்ந்து அதிகரித்து வருவதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வந்துள்ள பிரிட்டிஷ் ஏர்வேஸ் -சர்வதேசப் பிரிவு தலைவர் மைக் ஹால் கூறினார்.
இரு மாதங்களில் இந்தப் புதிய விமானங்கள் இயங்கத் தொடங்கும் என்றும் ஹால் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் சந்தித்துப் பேசிய ஹால், சென்னையிலிருந்து கூடுதல் பிரிட்டிஷ் ஏர்வேஸ்விமானங்களை இயக்குவதற்கு ஆதரவு தருமாறு கோரினார்.
தென் இந்தியாவிலிருந்து தான் பெருமளவிலான விமானப் போக்குவரத்து நடப்பதால், வெளிநாட்டு விமானநிறுவனங்களுக்கும் அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஹால் வேண்டுகோள் விடுத்தார்.
ஆனாலும் ஏர்-இந்தியா நிறுவனத்துடன் இணைந்து விமான சேவை நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும்,பிரிட்டிஷ் ஏர்வேஸ் விரைவில் இ-டிக்கெட்டிங் (இன்டர்நெட் மூலம் டிக்கெட் பதிவு) சேவையைதொடங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications